Wednesday, January 27, 2010

அழகிரி அண்ணணுக்குஅல்லக்கைகளின் சேர்க்கை தேவையா?

Categories:

உண்மையிலேயே எனக்கு மத்திய அமைச்சர் அழகிரி மீது எந்த கோபமும் இல்லை. நேரில் சந்தித்து பழகியவர்கள் சொன்னது, அண்ணனை சிலர் தங்கள் கொள்ளைக்கு வசமாக பயன்படுத்துகிறார்கள் என்பது தான். அது உண்மையா, இல்லையா என்பது தெரியாது. ஆனால்அண்ணன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவ்வளவு சக்தி வாய்ந்த அண்ணணுக்கு, எந்த வகையிலும் ஒத்து வராத இந்த கொள்ளைகும்பலின், அல்லக்கைகளின் சேர்க்கை தேவையா என்பது தான் மதுரை மக்களை ரொம்பவும் குழப்புகிறது.
இந்த கொள்ளைக்கும்பல் என்பது ,மதுரையில் அண்ணனின் ஆசிர்வாதத்தால் மூச்சா மற்றும் ரெண்டுக்கு போகும் கக்கூஸ் காண்ட்ராக்டுகள், மாநகராட்சி சாக்கடை தோண்டும் வேலைகள் , சைக்கிள் ஸ்டாண்டுகள், கந்து வட்டி கொடுத்து வாங்கும் அறிவு பூர்மான வேலை செய்யும் அறிவுஜீவிகள் போன்ற கழக கண்மணிகள் தான். அண்ணனை சுற்றி அரணாக இருப்பவர்களும் இந்த அல்லகைகள் தான். .
வரும் 30 ம் தேதி அண்ணன் பிறந்த நாள் . இதனை வைத்துக் கொண்டு இந்த அல்லக்கைகள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆத்தாடியோவ்....மதுரையே பொளந்து போகாதது தான் பாக்கி.
இன்று காலை மதுரை ரோடுகளில் வெள்ளை மினிஸ்டர் சட்டையில் ஆங்காங்கே கடப்பாரை, தட்டுகளுடன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தது இந்த அல்லக்கை கூட்டம். தமிழ் சினிமா பட ரவுடி தோற்றத்தில் இருந்த இவர்களை பார்த்து மதுரை பொதுசனம் மிரண்டு போனது. என்னவோ, ஏதோ என்று திகைத்தது. வந்தது வழக்கமாக அண்ணனின் அல்லக்கைகள். யார் வந்தால் என்ன.. போனால் என்ன என்று வந்திருந்த அல்லக்கைகள் ஆட்களை ஏவி மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி குழியை தோண்டினார்கள் . ஏதோ..அம்மன் கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டத்தான் போகிறார்கள் என்று எல்லா பொதுசனமும் வேடிக்கை பார்த்தது. ஏனென்றால் மதுரையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இப்படி வேலை நடந்து கொண்டிருக்கும் போதே, எஙகிருந்தோ வந்த அண்ணனின் மேலும் 10 அல்லக்கைகள், கைகளில் 20 அடிநீளத்தில் வைத்திருந்த இரும்பு கம்பிகளில் கோர்த்த திமுக கொடிகளை அந்த குழிகளில் 5 அடிக்கு 5 அடி தூரத்தில் தோண்டப்பட்ட குழிகளில் நட்டு வைத்து விட்டு சிட்டாக பறந்தார்கள். அப்படியே கோயிலை சுற்றியிருந்த கீழமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்குமாசி வீதி உள்பட மதுரையின் முக்கிய இடங்களில் எல்லாம் இப்படி குழியும், அதில் திமுக கொடியுமாக பறக்கிறது.
ஒரே சீராக மதுரை ரோடுகளில் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த கொடிகளை கண்டு மதுரை மக்கள் புளகாஙகிதம் அடைந்தார்கள். காரணம்,
வழக்கமாக மதுரை ரோடுகளில் நாய்கள், கழுதைகள், பன்றிகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக ஒடும்.

வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு போயிருப்பார்கள். பேய்களை தவிர வண்டியை ஓட்டுபவரின் குறுக்கே எதுவெல்லாம் பாயும் என்று தெரியாது. மிரண்டு போய் வண்டியின் ஓட்டத்தை தவறவிடுபவர்களை பிறகு 108 ஆம்புலன்ஸ் வந்து தூக்கி கொண்டு போகும். தப்பாக நினைக்க கூடாது. சப்இன்ஸ்பெக்டர் வெற்றிவேலுக்கு மட்டும் தான் இந்த 108 ஆம்புலன்ஸ் வராது.
வழக்கமாக இப்படி காணப்படும் மதுரை ரோடுகள் நேற்று முதல் திமுக கொடிகளை சுமந்து கொண்டு பார்க்க அழகாக காட்சி தருகிறது.

ரோட்டின் இருபக்கத்திலும் சீராக கொடிகளை நட்டிருப்பதால், வழக்கமாக குறுக்கே ஓடும் நாய், நரி, குதிரை, கழுதைகள், மாடுகள் எல்லாம் 20 அடி நீள திமுக (சிவப்பை கண்டால் விலங்குகள் பொதுவாக வெறிக்கும்) கொடிகளை பார்த்து மிரண்டு போய் எங்கோ பதுங்கி கொண்டன. வழக்கமான தாறுமாறாக வாகனங்களை ஓட்டும் வாகன ஒட்டிகள் வண்டிகளை சீராக ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். வண்டிகள் சீராக சென்றதால் வழக்கமாக காதைப்பிளக்கும் ஆரன் சத்தம் இல்லை.
மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக பயணம் செய்தார்கள். அதானே....அண்ணன் செஞ்ச எதிலயும் ஒரு அர்ததமிருக்குமில.....என்று இரண்டு கைத்தடிகள் பேசிக்கொண்டார்கள். அண்ணனை இந்த மதுரைக்கு பெற்று கொடுத்த கலைஞர் ஐயா பல்லாண்டு வாழ மீனாக்ஷி அம்மனை வாழ்த்தி போற்றினார்கள்.

( குறிப்பு ) நான்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக பொருளாளர் பதவி தனக்கு தரப்படவேண்டும் என்பது அண்ணனின் கோரிக்கை.அது நிறைவேற தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அண்ணன் இருப்பதாக ஜூனியர் விகடனில் சொல்லிவைத்தார்கள் .கிளம்பியது அண்ணன் படை.சீரானது மதுரை போக்குவரத்து. வாழ்க அண்ணன் தொண்டு .வளர்க அவரது திருப்புகழ்.இம்புட்டு தாங்க விஷயம்.

Spread The Love, Share Our Article

Related Posts

1 Response to அழகிரி அண்ணணுக்குஅல்லக்கைகளின் சேர்க்கை தேவையா?

January 27, 2010 at 4:23 PM

gud writing.

Post a Comment