Thursday, March 25, 2010

சென்னைக்கும், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்-கள ஆய்வில் மதுரை அமைப்பு


பறக்கும் ரயில், பளபளக்கும் சட்டசபை, மணக்கப்போகும் கூவம் என்று சென்னைக்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் கரும்பலகையும், மேற்கூரையும் இல்லாத பள்ளிகளுடன், ரயிலைக்கூட ஆவென்று வாய்பிளந்து பார்க்கும் நிலையில் தான் இன்றைக்கும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களின் நிலை உள்ளது. இது என்ன தமிழகமா? என்ற அறைகூவலுடனும், மக்களை மின்வெட்டு என்ற பெயரில் கற்காலத்துக்கு தள்ளிய திராவிட கட்சிகளை அப்புறப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதிய அமைப்பு ஒன்று மதுரையில் தொடங்கப்படுகிறது.

இலவசமாக வழங்கப்படும் கலர் டெலிவிஷன் பெட்டி போன்ற செய்கைகளால் தமிழர்களை முட்டாளக்கி வைத்திருக்கும் அரசியல் கலாச்சாரத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்க விருப்பதாக இந்த அமைப்பின் நிர்வாகியும், முதுகலை மருத்துவ பட்டதாரியுமான டாக்டர். மீனாட்சி சுந்தரம் கூறினார்.
இது பற்றி அவர் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


" அன்றைக்கு வடக்கு வாழ்கிறது.தெற்கு தேய்கிறது என்று சொல்லி ஆட்சிக்கு வநத திராவிட கட்சிகளுக்கு இன்று சென்னை மட்டும தான் தமிழ்நாடாக தெரிகிறது. சென்னை தவிர தமிழ்நாட்டின மற்ற மாவட்டங்கள் எல்லாம் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருட்டில் திண்ட்ாடுகின்றன. இதனால் சிறு, குறு தொழில்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டு பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. இத்தனை காலம் இவர்கள் ஆட்சி செய்து மக்களுக்கு கிடைத்த பலன் தான் என்ன?
தாங்கள் ஆட்சி செய்யும் சென்னையில் மட்டும் பறக்கும் பாலங்கள், பல வகையான சுரங்க பாதைகள்,பறக்கும் ரயில்கள்,புறநகர் மின்சார ரயில்கள், சாக்கடையை மணக்க வைக்க பல ஆயிரம் கோடியில் திட்டஙகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கார் உற்பத்தி நிறுவனங்கள், தடையில்லா மின்சாரம் என்று அத்தனை வசதிகளையும் செய்து கொண்டு வருகிறார்கள்.


ஆனால் தமிழ்நாட்டின் மற்ற பல மாவட்டஙகளில் இன்று சரியான சாலை வசதிகள் இல்லை. புறநகர்களில் மாட்டு வண்டிகளும், ஆட்டு மந்தைகளை போல் ஆட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் தான் போக்குவரத்து வசதிக்கான ஏற்படாக உள்ளன. பல கிராமங்களில் இன்றும் சாலை வசதி இல்லை. கரும்பலகையும், மேற்கூரையும் இல்லாத ஒர் ஆசிரியர் பள்ளிகளில் பரிதாகமாக தமிழ் குழந்தைள் படிப்பது மனதை நெருட வைக்கிறது. இந்த மாவட்டங்களில் விளைநிலங்களும், நீர் நிலைகளும் சூறையாடப்பட்டு வருகின்றன. இதையெல்லாம கேட்பது யார்? தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் 50 சதவீதம் வரை சென்னைக்கு செலவிடப்பட்டு வருகிறது.

சென்னையில எத்தனை சதவீதம் தமிழர்கள் வசிக்கிறார்கள்? இவர்களுக்கு சொகுசு பண்ணி தருவதற்கு எதற்கு தமிழ்நாட்டின் மற்ற மாவட்ட மக்களின் வரிப்பணம் செலவிடப் பட வேண்டும்? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை எந்த அளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை பற்றி ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார். படித்த தமிழ் இளைஞர்கள் கலந்து தகவல் தொடர்பை பயன்படுத்தி எங்களுக்கு ஆலோசனை தரலாம். தமிழ் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக டாக்டர்.மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமையன்று மதுரையில் மண்ணின் மைந்தன் பழ.நெடுமாறன் அவர்கள் இந்த அமைப்பை தொடங்கி வைக்கிறார். பல்வேறு சமூக சிந்தனையாளர்கள், அமைப்புகள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றன.


இந்த அமைப்பில் தமிழ்பத்திரிகையாளர்கள், சூழல் சிந்தனையாளர்கள், மொழி அறிஞர்கள், சமூக சிந்தனையாளர்கள் என்று சமூகத்தின அனைத்து தளத்திலும இருந்து ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். சாதி, மத அமைப்புகளில் இடம் பெறுவோருக்கு இந்த அமைப்பில இடமில்லை. தமிழர்களை முட்டாளாக்கும் அரசியல் கலாச்சாரத்திடமிருந்து மீட்டெடுக்க விரும்பும் அனைவரும் உலகம் முழுவதிலும் இருந்து தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார் இவர். டாக்டர்,மீனாடசி சுந்தரம், எம்,பி,பி,எஸ், எம்,டி, தொலைபேசி எண்- 094420 24446