Saturday, January 30, 2010

குடும்ப பாசம் இப்படி தான் இருக்கணும் -கலைஞர் பேரன் சினிமாவுக்கு தயாளு அம்மாள் பூஜை


கலைஞர் மேடையில் தொண்டை தண்ணி வற்ற பேசி கட்சியை வளர்த்தது ஒரு காலம். அவரது குடும்பம் அதே தமிழ் மக்கள் சேவையை நவீனமாக செய்யும் காலம் இது.

Wednesday, January 27, 2010

அழகிரி அண்ணணுக்குஅல்லக்கைகளின் சேர்க்கை தேவையா?

உண்மையிலேயே எனக்கு மத்திய அமைச்சர் அழகிரி மீது எந்த கோபமும் இல்லை. நேரில் சந்தித்து பழகியவர்கள் சொன்னது, அண்ணனை சிலர் தங்கள் கொள்ளைக்கு வசமாக பயன்படுத்துகிறார்கள் என்பது தான். அது உண்மையா, இல்லையா என்பது தெரியாது. ஆனால்அண்ணன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவ்வளவு சக்தி வாய்ந்த அண்ணணுக்கு, எந்த வகையிலும் ஒத்து வராத இந்த கொள்ளைகும்பலின், அல்லக்கைகளின் சேர்க்கை தேவையா என்பது தான் மதுரை மக்களை ரொம்பவும் குழப்புகிறது.
இந்த கொள்ளைக்கும்பல் என்பது ,மதுரையில் அண்ணனின் ஆசிர்வாதத்தால் மூச்சா மற்றும் ரெண்டுக்கு போகும் கக்கூஸ் காண்ட்ராக்டுகள், மாநகராட்சி சாக்கடை தோண்டும் வேலைகள் , சைக்கிள் ஸ்டாண்டுகள், கந்து வட்டி கொடுத்து வாங்கும் அறிவு பூர்மான வேலை செய்யும் அறிவுஜீவிகள் போன்ற கழக கண்மணிகள் தான். அண்ணனை சுற்றி அரணாக இருப்பவர்களும் இந்த அல்லகைகள் தான். .
வரும் 30 ம் தேதி அண்ணன் பிறந்த நாள் . இதனை வைத்துக் கொண்டு இந்த அல்லக்கைகள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆத்தாடியோவ்....மதுரையே பொளந்து போகாதது தான் பாக்கி.
இன்று காலை மதுரை ரோடுகளில் வெள்ளை மினிஸ்டர் சட்டையில் ஆங்காங்கே கடப்பாரை, தட்டுகளுடன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தது இந்த அல்லக்கை கூட்டம். தமிழ் சினிமா பட ரவுடி தோற்றத்தில் இருந்த இவர்களை பார்த்து மதுரை பொதுசனம் மிரண்டு போனது. என்னவோ, ஏதோ என்று திகைத்தது. வந்தது வழக்கமாக அண்ணனின் அல்லக்கைகள். யார் வந்தால் என்ன.. போனால் என்ன என்று வந்திருந்த அல்லக்கைகள் ஆட்களை ஏவி மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி குழியை தோண்டினார்கள் . ஏதோ..அம்மன் கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டத்தான் போகிறார்கள் என்று எல்லா பொதுசனமும் வேடிக்கை பார்த்தது. ஏனென்றால் மதுரையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இப்படி வேலை நடந்து கொண்டிருக்கும் போதே, எஙகிருந்தோ வந்த அண்ணனின் மேலும் 10 அல்லக்கைகள், கைகளில் 20 அடிநீளத்தில் வைத்திருந்த இரும்பு கம்பிகளில் கோர்த்த திமுக கொடிகளை அந்த குழிகளில் 5 அடிக்கு 5 அடி தூரத்தில் தோண்டப்பட்ட குழிகளில் நட்டு வைத்து விட்டு சிட்டாக பறந்தார்கள். அப்படியே கோயிலை சுற்றியிருந்த கீழமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்குமாசி வீதி உள்பட மதுரையின் முக்கிய இடங்களில் எல்லாம் இப்படி குழியும், அதில் திமுக கொடியுமாக பறக்கிறது.
ஒரே சீராக மதுரை ரோடுகளில் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த கொடிகளை கண்டு மதுரை மக்கள் புளகாஙகிதம் அடைந்தார்கள். காரணம்,
வழக்கமாக மதுரை ரோடுகளில் நாய்கள், கழுதைகள், பன்றிகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக ஒடும்.

வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு போயிருப்பார்கள். பேய்களை தவிர வண்டியை ஓட்டுபவரின் குறுக்கே எதுவெல்லாம் பாயும் என்று தெரியாது. மிரண்டு போய் வண்டியின் ஓட்டத்தை தவறவிடுபவர்களை பிறகு 108 ஆம்புலன்ஸ் வந்து தூக்கி கொண்டு போகும். தப்பாக நினைக்க கூடாது. சப்இன்ஸ்பெக்டர் வெற்றிவேலுக்கு மட்டும் தான் இந்த 108 ஆம்புலன்ஸ் வராது.
வழக்கமாக இப்படி காணப்படும் மதுரை ரோடுகள் நேற்று முதல் திமுக கொடிகளை சுமந்து கொண்டு பார்க்க அழகாக காட்சி தருகிறது.

ரோட்டின் இருபக்கத்திலும் சீராக கொடிகளை நட்டிருப்பதால், வழக்கமாக குறுக்கே ஓடும் நாய், நரி, குதிரை, கழுதைகள், மாடுகள் எல்லாம் 20 அடி நீள திமுக (சிவப்பை கண்டால் விலங்குகள் பொதுவாக வெறிக்கும்) கொடிகளை பார்த்து மிரண்டு போய் எங்கோ பதுங்கி கொண்டன. வழக்கமான தாறுமாறாக வாகனங்களை ஓட்டும் வாகன ஒட்டிகள் வண்டிகளை சீராக ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். வண்டிகள் சீராக சென்றதால் வழக்கமாக காதைப்பிளக்கும் ஆரன் சத்தம் இல்லை.
மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக பயணம் செய்தார்கள். அதானே....அண்ணன் செஞ்ச எதிலயும் ஒரு அர்ததமிருக்குமில.....என்று இரண்டு கைத்தடிகள் பேசிக்கொண்டார்கள். அண்ணனை இந்த மதுரைக்கு பெற்று கொடுத்த கலைஞர் ஐயா பல்லாண்டு வாழ மீனாக்ஷி அம்மனை வாழ்த்தி போற்றினார்கள்.

( குறிப்பு ) நான்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக பொருளாளர் பதவி தனக்கு தரப்படவேண்டும் என்பது அண்ணனின் கோரிக்கை.அது நிறைவேற தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அண்ணன் இருப்பதாக ஜூனியர் விகடனில் சொல்லிவைத்தார்கள் .கிளம்பியது அண்ணன் படை.சீரானது மதுரை போக்குவரத்து. வாழ்க அண்ணன் தொண்டு .வளர்க அவரது திருப்புகழ்.இம்புட்டு தாங்க விஷயம்.

Thursday, June 11, 2009


சினிமா நடிகைகள் தயவு செய்து தங்கள் உடைகளை அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் தமிழ் சமுடயத்தை வாழ வைக்கும் கலைஞரின் மானாட மாயிலாட குத்தாட்ட பெண்களும் உடைகளை அனுப்பி வைக்கலாம் .

Saturday, May 16, 2009

தமிழனுக்கு ஆப்பு


எப்போதும் பெரிதாக எதையும் சிந்திக்காதவனாக இருக்க வேண்டும். இதற்காக தான் ஆட்சியில் இருக்கும் போது சில எலும்பு த்துண்டுகளை அவர்களுக்கு வீச வேண்டும்.

தி முகவால் தமிழினத்திற்கு சில பல நிரந்தர எலும்பு துண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த எலும்புத்துண்டங்கள் தமிழர்களின் வயிற்றுக்குள் போய் செரிமானம் ஆக நீண்ட காலம் ஆகும் .

இந்த நிரந்தர எலும்பு துண்டுகள் எவை என்றால்,
1.
இலவச கலர் டிவி- தமிழர்களின் அறிவை வளர்த்து விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கு.
2.
விதவைகளுக்கு உதவி தொகை- டாஸ்மாக்கில் குடித்து விட்டு வயிறு வெந்து செத்து போனவர்களின் சாபத்தை தடுத்துக் கொள்ள
3.
வேலையில்லா இளைஞருக்கு உதவி தொகை - இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் எந்த வேலையும் அரசு வழங்கவில்லையே என்ற கோபத்தை தடுக்க.
4.
சத்துணவில் 3 முட்டை- தமிழர்களின் பிள்ளைகள் என்ன சோமலியாகாரர்களா? குழந்தைகளை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தானே அரசு போடும் சத்துணவை சாப்பிட வேண்டும்? ஓரு முட்டைக்கு 5 காசு கமிஷன் வைத்துக் கொண்டாலும்....ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் வழங்கப்படும் முட்டைக்கான கமிஷன் யாருக்கு போய் சேருகிறது?
5.
ரூபாய் 1 க்கு 1 கிலோ அரிசி- இது தான் ரொம்ப பரிதாபம். இந்த அரிசியை வாங்கி சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் தமிழன். உழைக்கும் காசை டாஸ்மாக்கில் குடித்து விட்டு , வெற்று பாட்டிலை 1 ரூபாய்க்கு பழைய பாட்டில் கடையில் விற்றுவிட்டு அப்படியே 1 ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டு வீட்டில் படுத்துக் கொள்ளலாம்.
6.
இலவச வேட்டி சட்டை- இதை இஸ்திரி செய்வது முடியாத காரியம். அப்படியே துவைத்து கட்டிக் கொண்டால், நான் கடவுள் அகோரிகள் போல காட்சியளிக்க வேண்டியது தான்.

இப்போது சில தற்காலிக எலும்பு துண்டுகளை பார்க்கலாம்
உலகமே உற்றுபார்க்கும் இந்திய ஜனநாயகம் வெறும் 500 ரூபாய் தாளுக்கு திமுக ஆட்சியில் தான் விலை பேசப்பட்டிருக்கிறது. தென்மாவட்டங்கள் முழுவதும் வீட்டுக்கு வீடு ரூபாய் நோட்டுக்கவர்கள் வீசி எறியப்பட்டிருக்கின்றன. ஓட்டுகள், ஆட்டுக்கிடாய் பிரியாணிக்கு விலை போயிருக்கிறது.
இந்த
ஜனநாயகமே பிடிக்காமல் 49 வையும் பயன்படுத்த விரும்பாமல் வீட்டுக்குள் பதுங்கி கொண்ட படித்த மேதைகள் எத்தனை பேர்? இப்போது தோற்றவர்கள் எல்லாம் பூஜ்யம் என்ற நிலையில் தோற்றுப் போனார்களா?

இன்றைக்கும்
கூட மதுரை திருமங்கலத்தில் ஓட்டலில் சாப்பிட போடப்படும் இலைகளை கூட சிலர் தூக்கி பார்க்கிறார்கள். பழக்க தோஷம். திருமங்கலம் இடைத்தேர்தலில் இலைக்கு அடியில் தான் பணம் வைத்து பரிமாறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தொடங்கிய பழக்கம் இன்று ஆந்திரா, கர்நாடகா வரை நீண்டிருக்கிறது. அங்குள்ள அரசியல்வாதிகளும் இலவசங்களை சொல்லி கூப்பாடு போடுகிறார்கள்.

இந்தியாவில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் எண்ணிக்கை 70 கோடி. நாட்டின் மக்கள் தொகையே 110 கோடி. காங்கிரஸ் நாட்டை ஆண்ட லட்சணம். பிளாடபாரங்களில் வாழும் நபர்களின் எண்ணிக்கை 20 கோடி. மீதமுள்ள 30 கோடி தான் நடுத்தரம். ஒரு சில நூறு பேர் தான் அதாவது, தயாநிதிமாறன்களும், தங்கபாலு, ஜி.கே.வாசன், போன்ற ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துள்ள பணக்காரர்களும்.

மற்ற நம்மை போன்றவர்கள் எல்லாம் மிஞ்சிப் போனால் ஒரு கம்ப்யூட்டரை வாங்கி வைத்துக் கொண்டு ஆற்காடு வீரசாமி கரண்ட்டை பிடு்ங்கினால் அழுது புழம்பி கொண்டு முடிந்தால் ஒரு இன்வெர்ட்டரை வாங்கி கொண்டு இங்கு உட்கார்ந்து பதிவு போட வேண்டியது தான். வேறு ஒரு மயி...பிடுங்க முடியாது.

ஈழப்பிரச்சனையின் சாரம் கூட தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டிருக்கிறது. நாளை அமெரி்க்காவின் சிலிகான் வேலியல் மயி...பிடுங்கும் உயர் மட்ட இந்திய தமிழனுக்கு இப்படி நாயடி கதி என்றாலும்..மிஞ்சி போனால் கடிதம், தந்தி தான்.

இப்படி எல்லா வகையிலும்...மொத்தத்தில் தமிழனுக்கு ஆப்பு.

யார் புத்திசாலி? சிவகங்கை மக்களா? சிங்கார சென்னை மக்களா? மதுரை மக்களா?



அதிபுத்திசாலிகளாக உலக அரசியலை அலசும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு, இந்த தேர்தல் சரியான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தேர்வு செய்த மக்களுக்கு நல்ல கல்வி, வாழ்விடம், சுகாதாரம் என்ற மூன்றையும் தருவது ஒரு சிறந்த ஜனநாயக அரசின் கடமை என்பதை மறந்த போன மக்கள் அல்லது இது போன்ற நல்ல திட்டங்களை கொண்டுவருவது தான் ஒரு அரசின் லட்சணம் என்பதை சொல்லித்தராமல் சீனாவையும், உலக பொருளாதாரத்தையும் உள்நாட்டில் உயர்த்தி பேசி மக்களை குழப்பிய கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு தாங்களே மண்ணை வாரி தலையில் போட்டுக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மதுரையில் மூன்றரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று சபதமிட்ட அழகிரி ஒரு லடசத்தி சொச்சம் ஓட்டுகளில் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டி இட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மோகன் தோல்வியை தழுவினார் .
ரவுடிகளை
தான் தனது பக்கபலமாக வைத்துக் கொண்டு மக்களை மாங்காய் மடையர்களாக்கி ஜனநாயத்தை கேலிக்கூத்தாக்கி, மக்களை பிரியாணிக்கு கையேந்தும் பிச்சைக்காரர்களாக, கேவலமாக பிறவிகளாக மாற்றி ஜனநாயத்தின் மாண்பை சீர்குலைத்தவர் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்ட அழகிரி தமிழ்நாட்டில் அதிக பட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது வெற்றி மதுரையில் அமைதியை விரும்பும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், அழகிரியை சுற்றிஇருப்பவர்களில் எண்பது சதவிகிதம் பேர் ரவுடிகள் என்பது ஊரறிந்த உண்மை. கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியை குழாயில் தண்ணீர் பிடிக்கும் சண்டைக்காக வெட்டிக் கொன்ற மருது, தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் சிக்கிய மன்னன், திருட்டு பொருட்களை விற்பனை செய்து வந்த கோபிநாதன், பல குற்றவியல் வழக்குகளில் சம்பந்தபட்டுள்ள எஸ்ஸார் கோபி, முபாரக் மந்திரி, சமீபத்தில் தேர்தல் நிதி தரவில்லை என்பதால் மதுரையின் பிரபல டாக்டரை அரிவாளால் மண்டையை பிளந்த அட்டாக் பாண்டி என்று பல ரவுடிகள் அழகிரியின் நண்பர்களாக உலாவருவது மதுரை மக்களில் பலரும் அறிந்த உண்மை.
இவர்களில்
அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அரசு சம்பந்தப்பட்ட பதவிகள் அழகிரியின் புண்ணியத்தால் கிடைத்து தற்போது சிவப்பு சைரன் காரில் வலம் வருகிறார்கள் என்பதும் உண்மை. நீதி தவறி விட்டோம் என்று வருந்தி தன்னையே மாய்த்துக் கொண்ட பாண்டிய மன்னன் ஆட்சி செய்த மதுரையில் பல பேரை அரிவாளால் போட்டு தள்ளிய ரவுடிகளை கைவசம் வைத்திருக்கும் அழகிரி எப்படி வெற்றி பெற முடிந்தது?
அந்தோ
பரிதாபம். உழைக்கும் வர்க்கம் நிறைந்திருக்கும் இந்த நகரில் இலவச டிவி, 1 ரூபாய் அரிசி, ஓசி பிரியாணி, உடன்பிறப்புக்கும், உடன்பிறப்பாக அல்லாமல் ஊத்துக்கு வந்து சேரும் புதிய நபர்களுக்கும் குவார்ட்டருக்கு பேட்டா, தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஐநூறு ரூபாய் பணம் ஆகியவை நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.நல்ல அரசியல் வாதிகளால் இந்த பிஸ்கோத்துகளை எல்லாம் எளிதாக மக்களுக்கு வழங்க முடயும் என்று புரிய வைக்க முடியாமல் போனது கம்யூனிஸ்டுகள் செய்த தவறு.
கலைஞர்
கொண்டு வந்த பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டத்தை சிறிது உருமாற்றி மதுரை மக்களிடம் புகுத்தினால் கலைஞரின் வாரிசுகள் மதுரையில்இனி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கலாம். மதுரை மாக்கான் என்பது இதுதானோ?

அடுதத்தாக தயாநிதி மாறன் பற்றி பார்க்கலாம். சாதாரணமாக சிடி விற்பனையில் தனது வாழ்க்கையை தொடங்கிய தயாநிதி மாறன்களின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள். கூடவே தாத்தா புண்ணியத்தால் எம்பி பதவி. அதில் ஏராளமான ஊழல்.
இது
போதாது என்று பதவியை பிடிக்கும் நாடகத்தில் தினகரன் தீவைத்து எரிப்பு, அதற்கு பிறகு கண்கள் பனிக்க, இதயம் இனிக்க சேர்ந்த தாத்தாவுடன் சேர்ந்த மாறனுக்கு இப்போதும் வெற்றி. இனி ஏதாவது ஒரு அமைச்சர் பதவி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாறனுக்கு கிடைக்கலாம்.
ஏற்கனவே குபேரனாக மாறிவிடடிருக்கும் மாறன்களை தேர்வு செய்ததன் மூலம், இவர்களை இன்னும் மேல் குடிமக்களாக ஆக்கிவிட வாக்களித்து அம்பானிகளை தாண்டி சொத்து சேர்க்கும் அளவுக்கு பதவியை கொடுத்த புண்ணியத்தை கட்டிக் கொண்டுள்ளார்கள் மத்திய சென்னை மக்கள்.
இவர் வெற்றி பெற்றதை நினைத்து இந்த நேரம் டாட்டா பயப்பட தொடங்கியிருப்பார். காரணம், ஏற்கனவே டாட்டா மாறனால் மிரடடப்பட்டவர். உளவியல் ரீதியாகவே பார்த்தால் கூட இவர்களுக்கு இருக்கும் தொழில்களை கட்டிக் காப்பாற்றிக் கொள்ளவே இவர்களுக்கு நேரம் போதாது. இந்த தயாநிதி மாறன் எப்படி மக்கள் பிரச்சனையை சிந்திக்க முடியும்? அதிபுத்திசாலிகள்(???) மத்திய சென்னை மக்கள். இனி நிட்சயமாக அரசு கம்பிவட தொலைகாட்சி வரவே வராது.

சிவகங்கை சீமான .சிதம்பரத்தின் நிலை தான் பரிதாபம். உள்ளாட்சி துறையை கவனித்தவருக்கு உள்ளூரை கவனிக்க நேரமில்லை. இன்று வரை சிவகங்கை மாவட்டத்தில் தேங்காய் நாரை உரித்து கயிறு பின்னும் தொழிலை தவிர வேறு எதுவும் உருப்படியாக நடந்த மாதிரி தெரியவில்லை.
ஏற்கனவே
இருந்த பல நூற்பாலைகள் மூடப்பட்டு அந்த இடங்களில் இருந்த சாமான்கள் எல்லாம் பழைய ஈயம் பித்தளை, பேரீச்சம் பழத்திற்கு விற்கப்பட்டு விட்டன. நாளுக்கு நாள் சிவகங்கை நசிந்து வருவதை அல்லது பெரிதாக எதுவும் முன்னேற்றம் இல்லாமல் இன்னும் பசிபட்டினியால் அவதிப்படும் சோமாலியா போன்ற ஆப்ரிக்க தேசத்து நாடுகளை போன்ற நிலையில் இருப்பதை காண முடியும்.
மதுரையிலிருந்து
பல நாடுகளுக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்காண நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சிவகங்கை மண்ணில் எந்த இடத்தில் தோண்டினாலும் கிராபைட் வளம் கொட்டிக்கிடக்கிறது என்று தெரிந்தும் அதை சிவகங்கை சீமான் சிதம்பரம் பல தடவை எம்பீ ஆக இருந்தும் கண்டு கொள்ளாமல் விட்டதும் ஒரு காரணம். வறண்டு போய் கிடக்கும் சிவகங்கையில் வாரத்திற்கு ஒரு வங்கி கிளையை திறந்தது தான் சிதமபரம் செய்த ஒரே நல்ல விஷயம்.
ஆனால்
இந்த வங்கிகளில் யார் பணத்தை கொண்டு வந்து சேமிப்பார்கள் என்பது தான் கேள்விக்குறி. சிரியாய் சிரித்தது சிவகங்கை. முடிவு...சிதம்பரம் திக்கி திணறி தான் ஜெய்த்தார்.
சபாஷ்..சரியாக சிந்தித்து காங்கிரசுக்கும், கூடவே குடும்பத்தை பார்த்து பார்த்து வளர்த்த திமுக வுக்கும் அல்வா கொடுத்த .....மதுரை, சென்னையை விட செழிப்பு இல்லாத சின்ன ஊரில் அன்றாடம் வயித்துப்பாட்டுக்கு அல்லல் படும் சிவகங்கை மக்கள் தான் புத்திசாலிகள்.
உள்ளாட்சி அமைச்சரையே வாழ்க்கையின் எல்லைக்கு ஓடவிட்டார்கள்.