மதுரையில எப்போ என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது. போன வாரம் அப்படித்தான்.'நான் தான்டா பெரிய ஆளு' 'நமக்கு மேல் புத்திசாலி யாருமே இல்ல' னு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்திக்கிட்டு இருந்தாரு.சனங்க எல்லாம் வாய பொழந்துக்கிட்டு பாத்தாங்க அவர.ஏன்னா, அவர் இருந்தது மதுரை திமுக பெரிய இடத்துக்கிட்ட. 'நாய்சேகர்'"முட்டகோசு குமார்'"ஊத்து பாண்டி" ன்னு இருக்க மாதி இவருக்கு நெத்தியில இருக்க குங்கும பொட்டு தான் அடையாளம்.அவர பார்த்த தமிழ்நாட்டு அமைச்சருங்க அத்தன பேருக்கும் தொட நடுங்கும்.அமைச்சருங்களுக்கே அந்த கதின்னா...ஒக்காமக்கா, மதுரையில இருக்க அதிகாரிங்களுக்கு அவர் கொடுக்கற மருவாதய கேக்கவா வேணூம்!அவர் உத்தரவு போட்டா செஞ்சே ஆகணும்.
ஆனா...இப்பிடி மானம்,மருவாதயோட இருந்த அவர போன வாரம் நாலு,அஞ்சு பேரு சேந்து கும்மாங்குத்து குத்துனதுல இப்போ அவரு மதுரையில ஒரு ஆஸ்பத்திரியில படுத்து கெடக்குராரு.'எவ்வுளா அடிச்சாலும் நல்லா தாங்குரானேயா" என்ற வடிவேலு பட காமெடி மாதிரி, அவங்க அடிச்சப்ப இவர் கத்தாம இருந்தாதல வந்த வினை இது. சும்மா பிச்சு வாங்கி அனுப்பியிருக்காங்க நம்ம பொட்டு பார்ட்டிய. இதுல ஒரு விஷயம் தான் காமெடி. நம்ம பொட்டுக்கே இந்த கதின்னா, நம்மல்லாம் எந்த மூலைக்கு என்ற வெடவெடத்து போயிருக்கிறார்கள் மற்ற அல்லக்கைகள்.
ஜுனியர் விகடனில் இத பத்தி 3 ம் பக்கத்திலயே சும்மா புட்டு புட்டு வெச்சிருக்காங்க.
கதை சுருக்கம் படிங்க
ஜூ.விகடன் பேனர்:
மதுரை புள்ளி மடக்கம்
கதை:
கழுகார் - " யாரு என்னன்னு கேட்கப்படாது.மதுரை பொட்டுக்கார புள்ளிய சென்னைக்கு வரச்சொல்லி பின்னி பெடலெடுத்துட்டாங்களாம்". கடந்த வாரம் சென்னையிலிருந்து மதுரை பொட்டுக்கார புள்ளிக்கு போன் போனது. மறுமுனையிலிருந்து குரல்' உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க' என்று பொட்டுக்காரரிடம் சொல்ல, தயங்கிய பொட்டு 'நான் வரமுடியாது' என்று பதிலளித்தது. இதற்கு அடுத்து முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து வாஞ்சையான அழைப்பு பொட்டுப்புள்ளிக்கு போனது. பொட்டும் உடனே தனது 'சூப்பர்' நண்பருடன் கிளம்பி சென்னைக்கு போனார். அங்கு போனதும் முக்கிய அலுவலகத்தில் பொட்டு புள்ளியுடன் இருந்த சூப்பரை மட்டும் வெளியே உட்கார வைத்து விட்டு நாலைந்து வாட்டசாட்டமான நபர்கள் பொட்டுக்காரரை மட்டும் ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டு போனார்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை.'துவண்டு போய் வந்தார் பொட்டு' என்கிறார்கள். பொட்டை அழைத்து போன வாட்டசாட்டமான நபர்கள் போலீஸ்காரர்கள் என்று சிலரும், போலீஸ் மாதிரி என்றும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பொட்டை அழைத்துச் சென்று பின்னிபெடலெடுத்து மதுரைக்கு அனுப்பி வைத்தது உண்மை. இப்படி பெடலெடுக்கும் போது 'அண்ணணுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல' என்று பொட்டு திமிற அந்த வாட்டசாட்டமான நபர்கள் அண்ணன் சொல்லி தான் இந்த பூஜையே நடக்குது என்று இன்னும் பூஜையை வலுவாக நடத்தினார்களாம்.
பொட்டின் பூஜை குறித்து மதுரை அதிகார மையத்திற்கு சூப்பர் நண்பர் பல தடவை போன் போட்டு சொல்ல முயற்சிக்க அந்த பக்கமிருந்து பதில் இல்லையாம்.
இது பற்றி அந்த வட்டாரத்தில் கேட்ட போது, மூத்தவரை திசைதிருப்பி பலர் சொகுசாக இருப்பதும், திமுகவின் முன்னாள் மதுரை சீனியர்கள் அதிமுகவுக்கு போகுமளவு வெறுப்படைய நேரிட்டதாகவும் ஆட்சி பீடத்திற்கு தகவல் போனதாம்.இதனால் தான் பொட்டுக்கு இந்த கவனிப்பாம். இது போல் மதுரையில் இன்னும் சிலருக்கும் சென்னைக்கு வரச்சொல்லி போன் போனதாம்.பயத்தில் அவர்கள் மறுத்து இப்போது போனை கேட்டால் அலறுகிறார்களாம்.
இது தான் அந்த செய்தி.
இதிலிருந்து தெரிய வருவது- " மற்றவர்களை விட புத்திசாலி என்று எண்ணுபவன் எப்போதும் ஏமாந்தே இருப்பான்".
தலைப்பு இப்பூடீஉம் வெக்கலாம்...."சேரக்கொடாத எடத்துல சேந்த வாங்க கூடாது எல்லாம் வாங்க வேண்டி வரும்"
1 Response to மற்றவர்களை விட புத்திசாலினு நெனச்சா இது தான் கதி
We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111
Best Digital Marketing Agency in Chennai
Best Content Marketing companies in Chennai
Best SEO Services in Chennai
leading digital marketing agencies in chennai
digital marketing agency in chennai
best seo company in chennai
best seo analytics in chennai
Post a Comment