Monday, February 1, 2010

அழகிரி அண்ணனை ஆற்றில் இறக்கிய அல்லக்கைகள்

Categories:


விழவு மலிமூதூர் என்ற பெயர் மதுரைக்கு உண்டு. காரணம், மதுரையில் தினமும் ஏதாவது விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். விழாக் கொண்டாட்டங்களால் மதுரை நகரம் களை கட்டி இருக்குமாம். இப்படி விழாக்கள் மலிந்து இருந்த ஊரால் விழவு மலிமூதூர் என்று மதுரையை சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்படி நடக்கும் விழாக்களில் சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு புகழ்பெற்றது. பெருமாள் ஆகிய அழகர் தனது தங்கையான மீனாட்சியின் திருமண விழாவைக் காண மதுரையின் வடக்குதிசையிலிருக்கும் அழகர் மலையில் இருந்து கிளம்பி மதுரையின் தெற்கு பக்கத்திலிருக்கும் கோயிலுக்கு குதிரையில் வருகிறார். வடக்கையும், தெற்கையும் நடுவில் ஓடும் வைக ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றை கடக்கும் போது அழகர் உடுத்தியிருக்கும் ஆடையின் நிறத்தை கொண்டு தான், அந்த ஆண்டு நாட்டில் நல்ல மழை பெய்து செழிப்பு ஏற்படும்.
உதாரணமாக அழகர் தங்ககுதிரையில் அமர்ந்து பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து பயிர்கள் விளைந்து செழிக்கும் என்பது ஐதீகம். சிவப்பு பட்டு உடுத்தி இறங்கினார் என்றால், வறட்சி வரப்போகிறது என்று பொருள்.

இப்படி இருக்கும் நிலையில், அழகருக்கு பதிலாக தை மாதத்தில் அழகிரி ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரையில் நடைபெற்றது. அழகிரியின் அல்லக்கைகள் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். அல்லக்கைகளின் வருமானம் செழிக்க வேண்டும் என்பதற்காக, அழகிரி பச்சை பட்டு உடுத்தி ஆற்றில்???(திருமண மண்டபத்தில் நடந்த விழாவில்) இறங்கினார். விளைவு அல்லக்கைகள் காட்டில் மழை.

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "அழகிரி அண்ணனை ஆற்றில் இறக்கிய அல்லக்கைகள்"

Post a Comment